கோவை: பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் ஆற்றுப்படுகையில் திதி கொடுக்க சென்றவர்களை மலைத் தேனீக்கள் கொட்டியதில், ஒருவர் பலி -13 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் ஆற்றுப்படுகையில் திதி கொடுக்க சென்றவர்களை மலைத் தேனீக்கள் கொட்டியதில், ஒருவர் பலி -13 பேர் படுகாயம் அடைந்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார். கறிக் கடை நடத்தி வருகிறார். இவரது பாட்டி இறந்த 16-ஆம் நாள் திதி கொடுப்பதற்காக குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் வழியாகச் செல்லும் ஆழியாறு ஆற்றுப்படுகைக்குச் சென்றுள்ளனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக, அங்கு இருந்த தேன் கூடு கலைந்து, மலைத் தேனீக்கள் கூட்டமாக வந்து பொது மக்களை சரமாரியாகக் கொட்டியது. இதில் ரமேஷ் தேனீக்கள் கொட்டியதில் மயக்கம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

பின்னர், அங்கு சென்ற பொள்ளாச்சி தீயணைப்புத் துறை அதிகாரிகள் பொதுமக்கள் உதவியோடு, காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 13-பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த தாலுகா காவல் நிலைய போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார். கறிக் கடை நடத்தி வருகிறார். இவரது பாட்டி இறந்த 16-ஆம் நாள் திதி கொடுப்பதற்காக குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் வழியாகச் செல்லும் ஆழியாறு ஆற்றுப்படுகைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக, அங்கு இருந்த தேன் கூடு கலைந்து, மலைத் தேனீக்கள் கூட்டமாக வந்து பொது மக்களை சரமாரியாகக் கொட்டியது. இதில் ரமேஷ் தேனீக்கள் கொட்டியதில் மயக்கம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
பின்னர், அங்கு சென்ற பொள்ளாச்சி தீயணைப்புத் துறை அதிகாரிகள் பொதுமக்கள் உதவியோடு, காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 13-பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த தாலுகா காவல் நிலைய போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.