கோவை: பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த மாணவர்களுக்குக் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று தொடங்கியது.
கோவை: பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த மாணவர்களுக்குக் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று தொடங்கியது.
பொள்ளாச்சி மகாலிங்க புரம் பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக அரசு கலை அறிவியல் கல்லூரியில், பி.ஏ. ஆங்கிலம், பி.எஸ்.சி. கணிதம், பி.பி.ஏ, பி.காம் சி.ஏ, பி.காம் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாகப் பெறப்பட்டன. இதுவரை 1,712-மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் சிறப்புப் பிரிவுகளுக்கான மாணவர்களுக்குக் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அரசு கல்லூரி முதல்வர் ராஜ்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்களின் ஆவணங்களைச் சரி பார்த்தனர். இதில், மாற்றுத்திறனாளி பிரிவில் 4-பேரும், தேசிய மாணவர் படைப் பிரிவில் ஒருவரும், விளையாட்டுப்பிரிவில் 9-பேரும், முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் ஒருவரும் என மொத்தம் 15-மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த முறை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதால், தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், உள்ளூர் மாணவ மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதோடு, வெளிமாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கும் கல்லூரியில் இடம் வழங்கப்படும்.
இதனால் கல்லூரியில் காலியிடங்கள் இருக்காது. அனைத்து பாடப் பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கை முழுமையாகப் பூர்த்தி செய்யப்படும் என்று, தெரிவித்த ஆசிரியர்கள், நேற்று தொடங்கியுள்ள இந்த மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக் கூட்டம், செப்டம்பர் 1-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி மகாலிங்க புரம் பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக அரசு கலை அறிவியல் கல்லூரியில், பி.ஏ. ஆங்கிலம், பி.எஸ்.சி. கணிதம், பி.பி.ஏ, பி.காம் சி.ஏ, பி.காம் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாகப் பெறப்பட்டன. இதுவரை 1,712-மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் சிறப்புப் பிரிவுகளுக்கான மாணவர்களுக்குக் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அரசு கல்லூரி முதல்வர் ராஜ்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்களின் ஆவணங்களைச் சரி பார்த்தனர். இதில், மாற்றுத்திறனாளி பிரிவில் 4-பேரும், தேசிய மாணவர் படைப் பிரிவில் ஒருவரும், விளையாட்டுப்பிரிவில் 9-பேரும், முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் ஒருவரும் என மொத்தம் 15-மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த முறை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதால், தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், உள்ளூர் மாணவ மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதோடு, வெளிமாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கும் கல்லூரியில் இடம் வழங்கப்படும்.
இதனால் கல்லூரியில் காலியிடங்கள் இருக்காது. அனைத்து பாடப் பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கை முழுமையாகப் பூர்த்தி செய்யப்படும் என்று, தெரிவித்த ஆசிரியர்கள், நேற்று தொடங்கியுள்ள இந்த மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக் கூட்டம், செப்டம்பர் 1-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.