கோவையில் அனைத்து காவல் நிலையங்களிலும் மக்கள் கருத்து கேட்கும் பெட்டி வைக்க முடிவு - மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் தகவல்.

கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்கள் பொதுமக்களிடம் காவல்துறையின் அணுகுமுறை குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிப்பதற்காக புதிய முறையை கொண்டு வந்துள்ளார்.


கோவை:பொதுமக்களிடம் காவல்துறையின் அணுகுமுறை குறித்து கருத்துக்களை தெரிவிப்பதற்காக புதிய முறையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்,செல்வநாகரத்தினம்

கொண்டு அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம், கோவை மாவட்டம் அனைத்து உட்கோட்ட அலுவலகம், காவல் நிலையங்கள் மற்றும் காவல் அலுவலகத்தில் இயங்கக்கூடிய அனைத்து சிறப்பு பிரிவு (Special Unit) அலுவலகங்களின் நுழைவாயிலில் மக்கள் கருத்து கேட்கும் பெட்டி (Public Feedback box) வைக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

அந்த பெட்டியில் மக்கள் அளித்துள்ள கருத்து படிவங்களை, ஒவ்வொரு மாதம் இறுதியில் படிவங்களை எடுத்தும் பிரதி மாதம் 1 ஆம் தேதி மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளரின் தனி அறிக்கையுடன் அனுப்பப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

கருத்துக்கள் குறித்தான படிவம் (Feedback Form) நிலைய வரவேற்பாளர்/நிலைய எழுத்தர் வசம் இருக்க வேண்டும் என்றும் இந்தப் படிவத்தை காவல் நிலையம் மற்றும் உட்கோட்ட அலுவலகம் அணுகி வரும் பொதுமக்களிடம் தங்களின் கருத்துக்களை தெரிவிப்பதற்காக வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பொதுமக்களின் நன்மதிப்பை பெற்று சிறப்பாக பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...