வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2021 - 2022ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021 - 2022ம் கல்வி ஆண்டில் பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை இன்று தொடங்கி 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021 - 2022ம் கல்வி ஆண்டில் பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை இன்று தொடங்கி 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மாணவர் சேர்க்கையை கல்லூரி முதல்வர் முனைவர் ஸ்ரீதரன் தொடங்கி வைத்தார். கடந்த 24ம் தேதி சிறப்பு ஒதுக்கீடு திட்டப்படி மாற்றுத் திறனாளிகள்.ஓய்வு பெற்ற ராணுவத்தினர் குடும்பத்தினருக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு சேர்க்கை நடைபெற்றது.

தொடர்ந்து பொதுப் பிரிவிற்கான சேர்க்கை இன்று முதல் பிஏ தமிழ் 50, பிஏ இங்க்லீஷ் 60, பிஜிஏ 60, பிபிஏ 60, பிஎஸ்சி கணினியல் 60, பிஎஸ்சி ஐடி 60, பிகாம் 60, பிகாம் சிஏ 60 இடங்கள் என 520 இடங்கள் நிரப்பப்படுகின்றன.

மாணவர்கள் தமிழக அரசு வழிகாட்டுதலின்படி முக கவசம் அணிந்து தங்களது பெற்றோருடன் சேர்க்கைக்கு வந்திருந்தனர். கல்லூரிக்கு வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கை சுத்திகரிப்பு திரவம் வழங்கப்பட்டு உடல் வெப்பமானி பரிசோதனைக்குப் பின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.



மாணவர் சேர்க்கை பணிகளில் முதல்வர் முனைவர் ஸ்ரீதரன், பேராசிரியர்கள் பெரியசாமி, மகாலட்சுமி உட்பட உதவி பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...