கோவையில் மீன் பிடித்த 6ம் வகுப்பு மாணவன் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!

கோவை: கோவையில் மீன் பிடித்த 6ம் வகுப்பு மாணவன் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் மீன் பிடித்த 6ம் வகுப்பு மாணவன் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவைபுதூர் அறிவொளி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருடைய மகன் வெற்றி (11), இவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில், நேற்று நண்பர்களுடன் கோவைபுதூர் சுப்பராயன் கோவில் அருகே உள்ள கிணற்றில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கச் சென்றுள்ளான்.

அப்போது, திடீரென்று கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினான். இதனால் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் கோவை தெற்கு தீயணைப்பு நிலைய அதிகாரி வேலுச்சாமி தலைமையில் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர்.

இதையடுத்து, கிணற்றில் குதித்து சிறுவனின் உடலை தேடினர். பின்னர், உடலை கண்டுபிடித்து கயிறு கட்டி மீட்டனர். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...