கோவை: கோவையில் அன்னூர் பகுதியில் லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்ட கிராம நிர்வாக அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கோவை: கோவையில் அன்னூர் பகுதியில் லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்ட கிராம நிர்வாக அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம், அன்னூர் தாலுகா, வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிபவர் குமார்(48). இவர் பால்ராஜ் என்பவரிடம் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய, 3,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் பால்ராஜிடம் லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்டார்.
லஞ்ச ஒழிப்புத் துறை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் திவ்யா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு 11:00 மணி வரை வி.ஏ.ஓ., குமாரிடம் வாக்குமூலம் பெற்றனர்.
இதையடுத்து, அவரை நேற்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, உடுமலை சிறையில் அடைத்தனர். மேலும் கோவை கணபதியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், வி.ஏ.ஓ., குமாரை சஸ்பெண்ட் செய்து கோவை வடக்கு ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவை மாவட்டம், அன்னூர் தாலுகா, வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிபவர் குமார்(48). இவர் பால்ராஜ் என்பவரிடம் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய, 3,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் பால்ராஜிடம் லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்டார்.
லஞ்ச ஒழிப்புத் துறை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் திவ்யா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு 11:00 மணி வரை வி.ஏ.ஓ., குமாரிடம் வாக்குமூலம் பெற்றனர்.
இதையடுத்து, அவரை நேற்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, உடுமலை சிறையில் அடைத்தனர். மேலும் கோவை கணபதியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், வி.ஏ.ஓ., குமாரை சஸ்பெண்ட் செய்து கோவை வடக்கு ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.