கோவை: பொள்ளாச்சி அருகே நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்புப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றபோது மர்மமான முறையில் தண்ணீரில் மூழ்கி காளி என்பவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: பொள்ளாச்சி அருகே நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்புப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றபோது மர்மமான முறையில் தண்ணீரில் மூழ்கி காளி என்பவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் காளி, இவரும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் முத்து, பாண்டி உள்ளிட்ட மூவரும் நேற்று நவமலை ஆற்றில் மீன்பிடிக்கச் சென்று உள்ளனர்.
அப்போது மூவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. காளி மீன் பிடிக்க ஆற்றில் இறங்கியதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் காளி தண்ணீர் இருந்து வெளியில் வராததால் தேடிப் பார்த்த நண்பர்கள் அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, அங்கு விரைந்த ஆழியார் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி இறந்த நிலையில் இருந்த காளியின் உடலை மீட்டனர்.

உடலில் காயங்கள் இருந்ததால் அவரை யாராவது அடித்து கொலை செய்தார்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும், இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் காளி, இவரும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் முத்து, பாண்டி உள்ளிட்ட மூவரும் நேற்று நவமலை ஆற்றில் மீன்பிடிக்கச் சென்று உள்ளனர்.
அப்போது மூவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. காளி மீன் பிடிக்க ஆற்றில் இறங்கியதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் காளி தண்ணீர் இருந்து வெளியில் வராததால் தேடிப் பார்த்த நண்பர்கள் அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, அங்கு விரைந்த ஆழியார் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி இறந்த நிலையில் இருந்த காளியின் உடலை மீட்டனர்.
உடலில் காயங்கள் இருந்ததால் அவரை யாராவது அடித்து கொலை செய்தார்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும், இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.