திருப்பூர்: மத்திய அரசின் ஜவுளித்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமர்த் திட்டத்தின் கீழ் இலவசப்பயிற்சியுடன் வேலை வாய்ப்பு பெறத் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் அழைப்பு விடுத்துள்ளார்.
திருப்பூர்: மத்திய அரசின் ஜவுளித்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமர்த் திட்டத்தின் கீழ் இலவசப்பயிற்சியுடன் வேலை வாய்ப்பு பெறத் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் அழைப்பு விடுத்துள்ளார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம். மத்திய அரசின் ஜவுளித் துறை சார்பாகக் கடந்த 2-ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமர்த் திட்டத்தின் மூலம் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த 18-வயதிற்கு மேற்பட்ட தகுதியுடையவர்களுக்குப் பின்னலாடை நிறுவனங்களில் 45-நாட்களில் மானியத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களுக்குக் கட்டாய வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டு வருவதாகவும் ஆனால் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு காரணமாக அவை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாத சூழ்நிலையில் இந்த ஆண்டு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தின் மூலம் 16-ஆயிரத்து 500-பேருக்குப் பயிற்சி அளித்து அவர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதிப்படுத்திக் கொள்ள மத்திய அரசு வழிவகை செய்து இருப்பதால் 18-வயது நிரம்பிய வேலை இல்லாத யாரானாலும் இத்திட்டத்தின் மூலம் மானியத்துடன் 45-நாட்களில் பின்னலாடை தொழிலை கற்று மத்திய அரசின் சான்றுடன் கட்டாய வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ளலாம்.
இதன் மூலம் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டத்தைக் குறைக்கவும் திருப்பூர் பின்னலாடை துறையினர் ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினையைச் சமாளிக்க முடியும் என்பதால் வெளிமாவட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் திருப்பூருக்குத் தாராளமாக வந்து தொழில் கற்றுக் கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களுக்கு ஏற்றார்போல பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் உறுதி செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம். மத்திய அரசின் ஜவுளித் துறை சார்பாகக் கடந்த 2-ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமர்த் திட்டத்தின் மூலம் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த 18-வயதிற்கு மேற்பட்ட தகுதியுடையவர்களுக்குப் பின்னலாடை நிறுவனங்களில் 45-நாட்களில் மானியத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களுக்குக் கட்டாய வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டு வருவதாகவும் ஆனால் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு காரணமாக அவை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாத சூழ்நிலையில் இந்த ஆண்டு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தின் மூலம் 16-ஆயிரத்து 500-பேருக்குப் பயிற்சி அளித்து அவர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதிப்படுத்திக் கொள்ள மத்திய அரசு வழிவகை செய்து இருப்பதால் 18-வயது நிரம்பிய வேலை இல்லாத யாரானாலும் இத்திட்டத்தின் மூலம் மானியத்துடன் 45-நாட்களில் பின்னலாடை தொழிலை கற்று மத்திய அரசின் சான்றுடன் கட்டாய வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ளலாம்.
இதன் மூலம் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டத்தைக் குறைக்கவும் திருப்பூர் பின்னலாடை துறையினர் ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினையைச் சமாளிக்க முடியும் என்பதால் வெளிமாவட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் திருப்பூருக்குத் தாராளமாக வந்து தொழில் கற்றுக் கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களுக்கு ஏற்றார்போல பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் உறுதி செய்வதாகத் தெரிவித்துள்ளார்.