கோவை: கிணத்துக்கடவு அருகே வடசித்தூரில் காவல்துறை சார்பில் கிராமிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
கோவை: கிணத்துக்கடவு அருகே வடசித்தூரில் காவல்துறை சார்பில் கிராமிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
அதிகரித்துவரும் திருட்டு, மோசடி, பணம் ஏமாற்றுதல் மற்றும் மகளிர் மட்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் காவல் துறையினர் சார்பில் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நெகமம் காவல் துறையினர் சார்பில் கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூரில் கிராமிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

நெகமம் காவல்துறை ஆய்வாளர் சரவணபெருமாள் தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர் சக்தி சரண்யா ஆகியோர் கலந்து கொண்டு கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால் அதைத் தடுக்கும் வகையில் பெற்றோர்கள் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளைக் கண்காணிக்க வளர்க்க வேண்டும், அறிமுகமில்லாத நபர் யாராவது செல்போனில் பேசினால் தவிர்க்க வேண்டும்.
கிராமங்களில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரியும் நபர்கள் குறித்துக் காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும், ஆசை வார்த்தை கூறி கூடுதலாகப் பணம் தரப்படும் என்று தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டால் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், காவல்துறையினர் இந்த கூட்டத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

அதிகரித்துவரும் திருட்டு, மோசடி, பணம் ஏமாற்றுதல் மற்றும் மகளிர் மட்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் காவல் துறையினர் சார்பில் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நெகமம் காவல் துறையினர் சார்பில் கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூரில் கிராமிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
நெகமம் காவல்துறை ஆய்வாளர் சரவணபெருமாள் தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர் சக்தி சரண்யா ஆகியோர் கலந்து கொண்டு கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால் அதைத் தடுக்கும் வகையில் பெற்றோர்கள் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளைக் கண்காணிக்க வளர்க்க வேண்டும், அறிமுகமில்லாத நபர் யாராவது செல்போனில் பேசினால் தவிர்க்க வேண்டும்.
கிராமங்களில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரியும் நபர்கள் குறித்துக் காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும், ஆசை வார்த்தை கூறி கூடுதலாகப் பணம் தரப்படும் என்று தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டால் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், காவல்துறையினர் இந்த கூட்டத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.