ஓபன் டூ ஆல் கால்பந்து போட்டி: வால்பாறை அணி கோப்பையை தட்டிச் சென்றது!

கோவை: கோவை மாவட்டம் மரக்கானத்தில் கடந்த இரண்டு நாட்களாக மரக்கான கால்பந்தாட்ட கிளப் நடத்திய ஓபன் டூ ஆல் கால்பந்தாட்ட போட்டி கோவை புதூரில் சிறப்பாக நடத்தப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் மரக்கானத்தில் கடந்த இரண்டு நாட்களாக மரக்கான கால்பந்தாட்ட கிளப் நடத்திய ஓபன் டூ ஆல் கால்பந்தாட்ட போட்டி கோவை புதூரில் சிறப்பாக நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் சுமார் 32 அணிகள் களம் கண்டது. வால்பாறை அணியும் மரக்கால் அணியும் மோதிய இறுதி போட்டி மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் மரக்காணம் அணி ஒரு கோல் போட்ட நிலையில், வால்பாறை அணி நான்கு கோல்களை அடித்து வெற்றிக்கோப்பையை தட்டிச் சென்றது.

வால்பாறை கால்பந்தாட்ட கிளப் கேப்டனான மாசாணி தலைமையிலான அணியினர் வெற்றிக்கோப்பையுடன் வெற்றிக்கொண்டாட்டத்தில் இன்று வால்பாறை நகர்பகுதி வழியாக சென்றனர்.

அப்போது, பொதுமக்கள் வாழ்த்துக்கூறி அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும், இதுபோன்ற துடிப்பான இளம் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கிடப்பில் போடப்பட்டுள்ள நகராட்சி கால்பந்தாட்ட மைதான பணிகளை விரைந்து முடித்து உதவ, சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...