பொள்ளாச்சியில் மாட்டுச் சந்தை திறக்க தடை நீட்டிப்பு - மாட்டு வியாபாரிகள் கவலை!

கோவை: பொள்ளாச்சியில் மாட்டுச் சந்தை திறக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் மாட்டு வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சியில் மாட்டுச் சந்தை திறக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் மாட்டு வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வருவதை தொடர்ந்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இதில் நேற்று முதல் திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள், பூங்கா, உடற்பயிற்சி மையங்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும், கடைகள் திறக்கப்படும் நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக தொடர்ந்து 2 மாதங்களாக மூடப்பட்டுள்ள பொள்ளாச்சி மாட்டுச் சந்தை, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வில் திறக்கப்படும் என்று வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில், நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் நோய் பரவல் கட்டுப்படுத்தும் விதமாக மாட்டுச்சந்தை செயல்பட தடையை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.



இதனால், வழக்கம்போல் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சந்தை செயல்படும் என எதிர்பார்த்து காத்திருந்த மாட்டு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மாடுகள் விற்பனைக்கு வராததால் மாட்டுச் சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.

எனவே, அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து நோய் பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குவோம் என்று தெரிவித்த மாட்டு வியாபாரிகள், விரைவில் சந்தை செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...