கோவையில் சப்-இன்ஸ்பெக்டர் போல போலி கையெழுத்திட்டு ஆவணம் தயாரிப்பு - பெண் உட்பட 3 பேர் கைது!

கோவை: கோவையில் சப்-இன்ஸ்பெக்டர் போல போலி கையெழுத்து போட்டு ஆவணம் தயாரித்த வழக்கில் கோவையைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவையில் சப்-இன்ஸ்பெக்டர் போல போலி கையெழுத்து போட்டு ஆவணம் தயாரித்த வழக்கில் கோவையைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.ஹச். காலனியைச் சேர்ந்தவர் சங்கீதா. இவர் விவரங்கள் மற்றும் ஆவணங்கள் காணாமல் போன நிலையில், புதிய ஆவணம் பெற முயன்று உள்ளார்.

அப்போது, அவரை அணுகிய கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த மனோகரன் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் போலியான ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் கொடுக்கலாம் என யோசனை கூறியுள்ளனர்.

இதற்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சங்கீதாவின் நிலப் பத்திரம் மற்றும் ஆவணங்கள் காணாமல் போனது போலவும், இது தொடர்பாக இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தது போலவும், அதற்கான சான்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியாற்றிய பாலமுருகன் என்ற சப் இன்ஸ்பெக்டரின் கையெழுத்தை போலியாக போட்டு ஆவணம் தயார் செய்து அதனை கிணத்துக்கடவு சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

அந்த ஆவணங்களை சரிபார்த்த சார் பதிவாளருக்கு சந்தேகம் எழுந்ததையடுத்து இது குறித்து உண்மை தன்மை அறிய இலுப்பூர் போலீஸ் நிலையத்திற்கு அந்த ஆவணங்களை தபால் மூலமாக அனுப்பி வைத்துள்ளார்.

இதனை பார்த்த எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி அதிர்ச்சி அடைந்தார். அந்த ஆவணங்களில் கையெழுத்திட்டுதாக கூறப்படும் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தற்போது இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் பணியில் இல்லாததும் அவரின் கையெழுத்தை போலியாக போடப்பட்டிருப்பது போலீஸ் நிலைய முத்திரையும் போலியாக தயாரித்து சீல் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.



இதையடுத்து, இன்ஸ்பெக்டர் உஷாநந்தினி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரெக்ஸ் ஸ்டாலின் மற்றும் போலீஸார் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி இந்த மோசடியில் ஈடுபட்ட சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சங்கீதா (41), மனோகரன் (42), ராஜேந்திரன் (47) ஆகிய 3 பேரையும் கைது செய்து எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

பின்னர், சங்கீதா திருச்சி சிறையிலும், மனோகரன், ராஜேந்திரன் ஆகியோர் அறந்தாங்கி சிறையிலும் அடைக்கப்பட்டனர். மேலும், இச்சம்பவத்தில் இவர்களுடன் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...