கோவை: பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் சுகாதார சீர்கேட்டை நிவர்த்தி செய்யக்கோரி அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் சுகாதார சீர்கேட்டை நிவர்த்தி செய்யக்கோரி அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை தொலைபேசி நிலையத்தில், கடந்த மாதம் முதல் கழிவறைகள் சுத்தம் செய்யப்படவில்லை என்று ஊழியர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இதுவரை அதிகாரிகள் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலக வளாகத்தில், இன்று பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்க நிர்வாகி சப்தகிரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அலுவலகத்தில் சுகாதார சீர்கேட்டால் துர்நாற்றம் வீசுவதாக கூறியும், இதை கண்டுகொள்ளாத அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், உடனடியாக அதிகாரிகள் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் நிலவும் சுகாதார சீர்கேட்டை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பிரபாகரன், மனோகரன், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை தொலைபேசி நிலையத்தில், கடந்த மாதம் முதல் கழிவறைகள் சுத்தம் செய்யப்படவில்லை என்று ஊழியர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இதுவரை அதிகாரிகள் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலக வளாகத்தில், இன்று பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்க நிர்வாகி சப்தகிரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அலுவலகத்தில் சுகாதார சீர்கேட்டால் துர்நாற்றம் வீசுவதாக கூறியும், இதை கண்டுகொள்ளாத அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், உடனடியாக அதிகாரிகள் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் நிலவும் சுகாதார சீர்கேட்டை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பிரபாகரன், மனோகரன், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.