பொள்ளாச்சி அருகே உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரி பழங்குடியின மக்கள் சார் ஆட்சியரிடம் மனு!

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரி பழங்குடியின மக்கள் சார் ஆட்சியரிடம் மனு தாக்கல் செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரி பழங்குடியின மக்கள் சார் ஆட்சியரிடம் மனு தாக்கல் செய்தனர்.

பொள்ளாச்சியை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் 17 மலை கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பழங்குடியின குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் மனு அளித்தனர்.



அந்த மனுவில், பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தம்மம்பதி, புளியங்கன்டி உள்ளிட்ட பகுதிகளில் பழங்குடியின மக்கள் வசிக்கும் வீடுகளின் கான்கிரீட் சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும், குடிநீர், மின்சாரம், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் பெண்கள், குழந்தைகள் நாள்தோறும் தவித்து வருவதாகவும், தம்மம்பதியில் அரசு சார்பில் கட்டப்பட்டு வந்த குடியிருப்புகளின், கட்டுமான பணிகள் பாதியில் விடப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்த பழங்குடியின மக்கள், அரசு மற்றும் அரசு அதிகாரிகள் பழங்குடியின மக்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி, அடிப்படை வசதிகளை உடனே செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...