வால்பாறை எஸ்டேட்டில் காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.!!

வால்பாறை: வால்பாறை கவர்க்கல் எஸ்டேட்டில் காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



வால்பாறை: வால்பாறை கவர்க்கல் எஸ்டேட்டில் காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த காடம்பாறை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கவர்க்கல் எஸ்டேட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல்துறை சார்பில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சிக்கு வால்பாறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்டு பேசிய வால்பாறை உட் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் குழந்தைகள் திருமணம் வரதட்சணை கொடுமை கருக்கலைப்பு முதியோர் பாதுகாப்பு போக்சோ சட்டம் காவல்துறையின் Sos செயலி பற்றி விரிவாக விளக்கம் அளித்தார்.

பெண்கள் குற்றங்கள் பற்றி காவல்துறைக்குத் தகவல் அளிக்க இலவச தொலைப்பேசி எண்கள் 1098-மற்றும் 181-என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் காவல்துறையைத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.

அடுத்துப் பேசிய காவல் ஆய்வாளர் கற்பகம் பணி செய்யும் இடத்தில் ஏற்படும் பாலியல் தொல்லைகள் பற்றி காவல்துறைக்கு உடனடியாக பெண்கள் தகவல் தெரிவிக்கக் கட்டணமில்லா தொலைப்பேசி எண் 181-எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டுகோள் விடுத்தார்.

விழிப்புணர்வு சம்பந்தமான துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். பெண்கள் குறிப்பாகக் குழந்தைகள் வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க இரவு நேரங்களில் தனியாக நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.



தொடர்ந்து கடந்த வாரம் கரடியால் தாக்கப்பட்டுக் காயமடைந்தவரின் குடும்பத்திற்கு அரிசி மளிகை காய்கறி நிவாரண உதவிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வால்பாறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன். வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் உதவி ஆய்வாளர் தலைமைக் காவலர் மற்றும் காவலர்கள் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...