ஒப்பந்த பணியாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும்-கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பி.ஆர். நடராஜன் எம்.பி. தலைமையில் புகார் மனு.!!

கோவை: ஒப்பந்த பணியாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்துள்ளனர்.


கோவை: ஒப்பந்த பணியாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்துள்ளனர்.

கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம், கோவை மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில், தூய்மை பணியாளர்கள், குடிநீர், மற்றும் தூய்மை காவலர்கள் என ஒப்பந்தம், சுய உதவிக்குழு, தினக்கூலி தொகுப்பூதியம் என்ற அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு பேரிடர் காலத்தில் தொடங்கப்பட்டு இன்று வரை சிறப்புடன் பணிகள் நடைபெற்று வருகின்றது.



இவர்களுக்கு அரசின் எவ்விதமான சட்ட சலுகைகளும் கிடைப்பதில்லை. மேலும், மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம், ஊதியம் வழங்குதல், பேரூராட்சிகளில் சுய உதவிக் குழு, தூய்மை, குடிநீர் பணியாளர்களுக்கு நிரந்தர பணி இடங்கள் வேண்டிக் கோரியும், கொரோனா தொற்றில் மரணம் அடைந்த பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும்,

வேலைகளுக்கு ஆட்கள் எடுக்கும் பொழுது சுய உதவிக் குழு மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்திட வேண்டும்.



இது போன்ற கோரிக்கைகள் பி.ஆர். நடராஜன் எம்.பி. தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக மாவட்ட ஆட்சியரை சந்திக்க பி.ஆர்.நடராஜன் எம்.பி. தலைமையில் ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க தலைவர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஊரக உள்ளாட்சித்துறை சங்க பொதுசெயலாளர் கே.ரத்தினகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான தூய்மைத்தொழிலாளர்கள் பெருந்திரள் மனு அளிப்பு இயக்கத்தில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...