கோவை: கொரோனா தொற்று குறைந்த காரணத்தால், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்துப் பிரிவுகளும் செயல்படும் என மருத்துவக் கல்லூரி டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.
கோவை: கொரோனா தொற்று குறைந்த காரணத்தால், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்துப் பிரிவுகளும் செயல்படும் என மருத்துவக் கல்லூரி டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.
கோவையில், கொரோனா தொற்று குறைந்து வருவதால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்துப் பிரிவுகளிலும், அனைத்து விதமான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்றுக்காக 1,200க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் சிறப்புச் சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது.
இதையடுத்து, அரசு மருத்துவமனையில் மற்ற நோயாளிகளைக் காட்டிலும், கொரோனா நோயாளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது, கோவையில் நோய்த் தொற்றுப் பரவல் குறைந்துள்ளதால் அரசு மருத்துவமனையில் அனைத்து துறைகளிலும் அனைத்து விதமான சிகிச்சைகள் மீண்டும் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு மருத்துவமனை முதல்வர் அ.நிர்மலா கூறியதாவது:–
கொரோனா பாதிப்பால் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது.
இதனால் அரசு மருத்துவமனையில் சாதாரணமாக மேற்கொண்டு வந்த பல்வேறு சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மிக அவசர சிகிச்சைக்கு மட்டுமே வர நோயாளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மேலும் கருப்புப் பூஞ்சை நோயாளிகளுக்கு அதிக அளவு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் மற்ற துறைகளில் முக்கிய, அவசர அறுவை சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில், கோவையில் தற்போது கொரோனா நோய்த் தொற்று தினசரி எண்ணிக்கை 200 -க்கும் கீழ் குறைந்துள்ளதால் அரசு மருத்துவமனைக்கு வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
இதனால் அனைத்து துறைகளிலும் அனைத்து விதமான சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள துறை சார்ந்த மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.