அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம்: தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பொள்ளாச்சியில் அனைத்து கட்சி சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகம்!

கோவை: தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தைக் கொண்டு வந்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து பொள்ளாச்சியில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.


கோவை: தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தைக் கொண்டு வந்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து பொள்ளாச்சியில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

கேரள மாநிலத்தைப் போல தமிழகத்திலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டு வரப்பட்டு தமிழக முதலமைச்சர் இத்திட்டத்தை அறிவித்துள்ளார். இது பெரும்பாலான மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.



சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு திட்டத்தை தமிழகத்தில் கொண்டுவந்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பொள்ளாச்சியில் திமுக, மதிமுக, காங்கிரஸ், தந்தை பெரியார் திக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் இன்று இத்திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திமுக கோவை மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் கலந்து கொண்டு பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற முறையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் எடுத்துரைத்தார். ஆனால், அதை சட்ட வடிவமாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் அனைத்து மக்களும் ஏற்றத்தாழ்வுகள் இன்றி கோவிலுக்குச் செல்லலாம். அர்ச்சகர் படிப்பு முடித்தவர்கள் அர்ச்சகர் பணிகளை மேற்கொள்ளலாம். இத்திட்டம் பிராமணர் சமுதாயத்திற்கு எதிரானது அல்ல அனைத்து ஜாதியினரும் ஒரே தொழிலை செய்வது போல அர்ச்சகத் தொழிலும் அனைத்து ஜாதி மக்களும் செய்யலாம் என்பதைதான் இத்திட்டம் வலியுறுத்துகிறது.

இதற்காக தமிழக முதல்வருக்கு அனைத்தரப்பு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...