ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற புதிய நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் தங்க நகைக்கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து போராட்டம்!

கோவை: கோவையில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற புதிய நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி ராஜவீதி, பெரிய கடை வீதி உட்பட பல்வேறு பகுதிகளில் மத்திய அரசை வலியுறுத்தி தங்க நகைக்கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவையில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற புதிய நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி ராஜவீதி, பெரிய கடை வீதி உட்பட பல்வேறு பகுதிகளில் மத்திய அரசை வலியுறுத்தி தங்க நகைக்கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்க நகைகளுக்கு இனி புதிய ஹால்மார்க் தர அடையாள எண் கொண்ட நிரந்தர முத்திரை பெறுவது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தங்க நகை தயாரிப்பாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இதன் ஒரு பகுதியாக, கோவையில் ராஜவீதி, பெரியகடை வீதி உட்பட நகரில் உள்ள தங்க நகை தயாரிப்பாளர்கள், 500க்கும் மேற்பட்ட தங்க நகைகடைகளை இரண்டு மணி நேரம் அடைத்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.



காலை 9 மணி முதல் 11.30 வரை கடைகளை அடைத்து, கடைகளின் முன்பாக கோரிக்கை அட்டைகளுடன் நகை கடை உரிமையாளர்களும், ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய நடைமுறையால் சிறு, குறு தங்க நகை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், Huid முத்திரை கட்டாயம் என்ற புதிய நடை முறையை ரத்து செய்ய வேண்டும் எனவும் போராட்டத்தின் போது வலியுறுத்தினர்.



மேலும், கோவை உட்பட தமிழகம் முழுவதும் போதுமான ஹால்மார்க் மையங்கள் இல்லாததால் தயாரிக்கப்பட்ட தங்கநகைகள் டன் கணக்கில் தேக்கம் அடைந்து இருப்பதாக குற்றம்சாட்டிய அவர்கள், புதிய நடைமுறையை தவிர்த்து பழைய முறையே தொடர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தங்க நகை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...