உடுமலையில் குடிபோதையில் மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு!

கோவை: உடுமலையில் குடிபோதையில் மருத்துவமனையில் ரகளை 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: உடுமலையில் குடிபோதையில் மருத்துவமனையில் ரகளை 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உடுமலைப்பேட்டை நகரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு நேற்று மாலை சிகிச்சைக்காக சிலர் வந்துள்ளனர். ஒருவர் விபத்தில் சிக்கி காயம் அடைந்ததாகவும் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டுமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்போது, மருத்துவர் வேறொரு நோயாளியைப் பார்த்து வருவதால் சிறிது நேரம் காத்திருங்கள் என கூறியுள்ளனர். ஆனால், தங்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டுமென அந்த கும்பலைச் சேர்ந்த சிலர் மிரட்டியுள்ளனர்.

இதனை அங்குள்ள செவிலியர் பொருட்படுத்தாமல் இருந்ததாக கூறி, அந்த கும்பல் ரகளையில் ஈடுபட்டது. மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்து தகாத வார்த்தைகளை பேசியுள்ளனர். இதனால் மருத்துவமனை வாயில் கதவு பூட்டப்பட்டது. இருந்தபோதிலும் மருத்துவமனைக்கு வெளியே இருந்து அவர்கள் மீண்டும் ரகளையில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பி விட்டனர்.

பின்னர், இப்பிரச்சினை தொடர்பாக உடுமலை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...