திருப்பூர்: உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் இன்று திருமூர்த்தி மலை பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கினார்.
திருப்பூர்: உடுமலைப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் இன்று திருமூர்த்தி மலை பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கினார்.
காடுகளில் இருந்து எடுத்து வரும் தேன், தானிய வகைகள், மூலிகைகள் போன்றவற்றை ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக முன்போல் விற்க முடியாத சூழல் நிலவி வருவதால், மலைவாழ் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
பலதரப்பட்ட இன்னல்களை சந்தித்து வரும் இந்த மலைவாழ் மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில், தனியார் நன்கொடை மூலமாக அம்மக்களுக்கு தேவையானநலத்திட்ட உதவிகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, இன்று திருமூர்த்தி மலையில் வாழும் மலைவாழ் மக்களுக்கு, நலத்திட்ட உதவிகளை உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேன்மொழி வழங்கினார். அரிசி, பருப்பு, மளிகை அடங்கிய அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை சுமார் 100 மலைவாழ் மக்களுக்கு வழங்கினார்.