திருப்பூரில் ஆர்பிடோ ஆசியா என்ற நிறுவனத்தின் பத்தாவது இரத்தப் பரிசோதனை மையம் திறப்பு விழா.!!

திருப்பூர்: திருப்பூரில் ஆர்பிடோ ஆசியா என்ற நிறுவனத்தின் பத்தாவது இரத்தப் பரிசோதனை மையம் திறப்பு விழா நடைப்பெற்றது.


திருப்பூர்: திருப்பூரில் ஆர்பிடோ ஆசியா என்ற நிறுவனத்தின் பத்தாவது இரத்தப் பரிசோதனை மையம் திறப்பு விழா நடைப்பெற்றது.

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்திற்குத் தேவையான மெஷின்களை விற்பனை செய்து வரும் மேகலா மெஷின் என்ற நிறுவனம் தற்பொழுது மருத்துவத் துறையில் மக்களுக்கான சேவையைத் துவக்கும் விதமாக, ஆர்பிடோ ஆசியா என்ற பெயரில் இரத்த பரிசோதனை மையம் துவங்கப்பட்டு சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் மக்களுக்கான 50-சதவிகித சலுகை கட்டணத்தில் சிறந்த சேவையை வழங்கி வருகிறது.

இந்த இரத்த பரிசோதனை மையத்தின் பத்தாவது புதிய கிளை திறப்பு விழா ரயில் நிலையம் அருகில்நடைபெற்றது. இந்த ரத்தப் பரிசோதனை நிலையத்தினை மேகலா மெஷின் உரிமையாளர் சுப்பிரமணியம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



கொரோனா காலத்தில் இரத்த பரிசோதனைகள் முடிவுகள் வருவதற்குத் தாமதம் ஆகும் நிலையை மாற்றி மிக குறைந்த கட்டணத்தில் அதி நவீன மெஷின்கள் மூலமாக விரிவாகப் பரிசோதனை செய்யப்பட்டுத் தரப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், ஆர்பிடோ ஆசியா ரத்தப் பரிசோதனை நிலையத்தின் உரிமையாளர் மருத்துவர் தரணி, இந்திய மருத்துவ சங்கம் திருப்பூர் கிளையின் முன்னாள் தலைவர் மருத்துவர் முருக நாதன், குமரன் மருத்துவமனை தலைவர் செந்தில் குமரன், ரேவதி மருத்துவமனை தலைவர் மருத்துவர் ஈஸ்வரமூர்த்தி, இந்திய மருத்துவ சங்கம் திருப்பூர் கிளையின் செயலாளர் மருத்துவர் பழனிச்சாமி உள்ளிட்ட மருத்துவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...