பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் 1500-கிலோ ரேஷன் அரிசி பதுக்கி கடத்த முயன்ற ஒருவரை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் 1500-கிலோ ரேஷன் அரிசி பதுக்கி கடத்த முயன்ற ஒருவரை கிழக்கு காவல் நிலைய போலீசார்கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
பொள்ளாச்சி ஊத்துக்காடு ரோடு பகுதியில் சண்முகவடிவேல் என்பவருக்கு சொந்தமான மிளகாய் குடோன் செயல்பட்டு வருகிறது.
சண்முகவடிவேலின் மகன் பிரபுராம் (42) என்பவர் தமிழக அரசு சார்பில், பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை கடத்தி, அவருடைய மிளகாய் குடோனில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் நேற்று இரவு அங்கு சென்ற பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் குடோனில் சோதனையிட்டதில், சுமார் 1500-கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட கிழக்கு காவல் நிலைய போலீசார், ரேஷன் அரிசியை பதுக்கி வைத்த பிரபுராமை கைது செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, உணவு கடத்தல் தடுப்பு போலீசார் பிரபுராம் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி ஊத்துக்காடு ரோடு பகுதியில் சண்முகவடிவேல் என்பவருக்கு சொந்தமான மிளகாய் குடோன் செயல்பட்டு வருகிறது.
சண்முகவடிவேலின் மகன் பிரபுராம் (42) என்பவர் தமிழக அரசு சார்பில், பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை கடத்தி, அவருடைய மிளகாய் குடோனில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் நேற்று இரவு அங்கு சென்ற பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் குடோனில் சோதனையிட்டதில், சுமார் 1500-கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட கிழக்கு காவல் நிலைய போலீசார், ரேஷன் அரிசியை பதுக்கி வைத்த பிரபுராமை கைது செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, உணவு கடத்தல் தடுப்பு போலீசார் பிரபுராம் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.