கோவை: பொள்ளாச்சி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
கோவை: பொள்ளாச்சி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்(65). இவர் தனது வீட்டின் அருகே உள்ள 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதையடுத்து, கோட்டூர் போலீசார் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், கோப்பெருந்தேவி நடத்திய விசாரணையில், பெருமாள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, பெருமாளை கைது செய்த போலீசார் கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்(65). இவர் தனது வீட்டின் அருகே உள்ள 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதையடுத்து, கோட்டூர் போலீசார் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், கோப்பெருந்தேவி நடத்திய விசாரணையில், பெருமாள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, பெருமாளை கைது செய்த போலீசார் கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.