திருப்பூர்: திருப்பூரில் நார் தொழிற்சாலையில் பணியாற்றிய சிறுவன் நார்கள் பதப்படுத்தும் குழியில் விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் நார் தொழிற்சாலையில் பணியாற்றிய சிறுவன் நார்கள் பதப்படுத்தும் குழியில் விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே குரல்குட்டை என்ற கிராமத்தில் ஸ்ரீ பாலாஜி காயர்ஸ் என்ற நார்த் தொழிற்சாலை இயங்கி வருகிறது கொரோனா காலம் என்பதால் பள்ளிகள் இன்னும் இயங்காத காரணத்தால் அதே பகுதியைச் சேர்ந்த கேசவன்(14) என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், இவர் பணியின் போது எதிர்பாராதவிதமாக நார்கள் கொட்டப்பட்டுள்ள குழியில் தவறி விழுந்துள்ளார். இவர் குழிக்குள் விழுந்தவுடன் மலைபோல் குவிந்து இருந்த நார்கள் இவர் மீது சரிந்து விழுந்தது.
இதனையடுத்து, அவரை உடனடியாக மீட்டு முதலுதவி அளித்தனர். ஆனால், அவர் மூச்சுத்திணறலால் இறந்துவிட்டார். இதன்பின் உடுமலை காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த கேசவனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்
மேலும், இச்சம்பவம் தொடர்பாக நார் தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே குரல்குட்டை என்ற கிராமத்தில் ஸ்ரீ பாலாஜி காயர்ஸ் என்ற நார்த் தொழிற்சாலை இயங்கி வருகிறது கொரோனா காலம் என்பதால் பள்ளிகள் இன்னும் இயங்காத காரணத்தால் அதே பகுதியைச் சேர்ந்த கேசவன்(14) என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், இவர் பணியின் போது எதிர்பாராதவிதமாக நார்கள் கொட்டப்பட்டுள்ள குழியில் தவறி விழுந்துள்ளார். இவர் குழிக்குள் விழுந்தவுடன் மலைபோல் குவிந்து இருந்த நார்கள் இவர் மீது சரிந்து விழுந்தது.
இதனையடுத்து, அவரை உடனடியாக மீட்டு முதலுதவி அளித்தனர். ஆனால், அவர் மூச்சுத்திணறலால் இறந்துவிட்டார். இதன்பின் உடுமலை காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த கேசவனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்
மேலும், இச்சம்பவம் தொடர்பாக நார் தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.