கோவையில் மதுக்கரை, வெள்ளலூர் பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் - சட்டசபையில் எம்.எல்.ஏ., செ.தாமோதரன் வலியுறுத்தல்!

கோவை: கோவையில் மதுக்கரை, வெள்ளலூர் பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று சட்டசபையில் எம்.எல்.ஏ., செ.தாமோதரன் வலியுறுத்தினார்.


கோவை: கோவையில் மதுக்கரை, வெள்ளலூர் பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று சட்டசபையில் எம்.எல்.ஏ., செ.தாமோதரன் வலியுறுத்தினார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்றது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கிணத்துக்கடவு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரன் பேசியதாவது:-

தமிழகம் தென்னை உற்பத்தியில் முன்னோடி மாநிலமாக உள்ளது. எனவே ரேஷன் கடைகள் மூலம் தென்னை வெள்ளத்தை விற்பனை செய்ய வேண்டும். அதே போன்று தேங்காய் எண்ணெய்யை அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் விற்க வேண்டும் என்றார்.

தென்னை வளர்ச்சி வாரிய மண்டல மையம் சென்னையில் உள்ளது. அதை பொள்ளாச்சிக்கு மாற்ற வேண்டும், கிணத்துக்கடவு பகுதியில் தக்காளி சாகுபடி அதிகளவு உள்ளது, ஆனால் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே, தக்காளியை மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றும் வகையில் தக்காளி ஜூஸ் மற்றும் ஜாம் போன்ற பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

குறிச்சியில் உள்ள காய்கறி சந்தையில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும், மதுக்கரை, வெள்ளலூர் பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று அவர் பேசினார்.

வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் பாதியில் நிற்கிறது, அதை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறிய அவர், கிணத்துக்கடவில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்று சட்டப் பேரவைக் கூட்டத்தில் செ.தாமோதரன் வலியுறுத்தி கோரிக்கை வைத்தார்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...