கோவை: கோவையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில், மலையாள மக்கள் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவை: கோவையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில், மலையாள மக்கள் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மலையாள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை ஆடிமாதம் அஸ்த்தம் நட்சத்திரம் தினத்தன்று துவங்கி 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த 10 நாட்களும் தினமும் வீட்டின் முன் பூக்கோலங்கள் போட்டு, வழிபாடு செய்து கொண்டாடி வருவது வழக்கம். இதில், 10வது நாள் திருவோண நட்சத்திர நாளான இன்று திருவோண பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில், மலையாள மக்கள் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கொரோனா நோய் தொற்று காரணமாக கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால், பக்தர்கள் கோவில் வாசலில் நின்றபடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வழக்கமாக உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கூடி பூக்கள் கோலம், நடனம், விருந்து என கொண்டாடும் ஓணம் பண்டிகை, இப்போது அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.