அவினாசிலிங்கம் பல்கலை சார்பில் மூலதனத்தின் பங்கு குறித்த முன்னோக்கிய பாதை கருத்தரங்கம்

உலக அரங்கில் பொருளாதார தரத்தை முன்னேற்றுவதற்கான உத்திகள் என்னும் நோக்கத்தின் அடிப்படையில் முதலீடு, கட்டமைப்பு வசதிகள் மற்றும் அறிவுசார் மூலதனத்தின் பங்கு குறித்த முன்னோக்கிய பாதை கருத்தரங்கம் கோவை அவினாசிலிங்கம் பல்கலையின் சார்பில் நடைபெற உள்ளது.



அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன வளாகத்தில் மேலாண்மைத் துறையினர் சார்பில் வருகின்ற டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த ஏழாவது சர்வதேச பன்னாட்டு கருத்தரங்கமானது உலக அரங்கில் பொருளாதார தரத்தை முன்னேற்றுவதற்கான உத்திகள் என்னும் நோக்கத்தின் அடிப்படையில் முதலீடு, கட்டமைப்பு வசதிகள் மற்றும் அறிவுசார் மூலதனத்தின் பங்கு குறித்த முன்னோக்கிய பாதை என்னும் தலைப்பில் நடைபெற உள்ளது. 

சர்வதேச பன்னாட்டுக் கருத்தரங்கத்தை தான்சானியா நிதித்துறை மேலாண்மை நிறுவனம் மற்றும் சென்னை தொழில் வர்த்தக சங்கத் தொழிற்துறையினரும், அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன மேலாண்மைத் துறையும் ஒருங்கிணைந்து இந்த சர்வதேச பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சர்வதேச பன்னாட்டுக் கருத்தரங்கானது மூன்று குழு விவாதங்கள் மற்றும் சிறப்புரைகள் கொண்டது. இக்குழு விவாதங்கள் கருத்தரங்கின் தலைப்பின் மூன்று பகுதிகளான முதலீட்டு சூழல், எதிர்காலத் தொழில்நுட்பத்தின் சிறந்த நகரங்கள் மற்றும் அதன் சவால்கள், அறிவுசார்ந்த மூலதனம் ஆகியவகைகளின் சிறந்த பங்களிப்பின் மூலம் ஒரு நாட்டின் எதிர்காலத்தில் மேம்பாடு அடைவதற்கான வித்துக்களை விதைக்கும் விதத்தில் அமையவிருக்கிறது.

சர்வதேச பன்னாட்டு கருத்தரங்கத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முனைவோர்கள், தொழில் மற்றும் வர்த்தகத் துறையை சார்ந்தவர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆய்வாலர்கள் கலந்து கொள்கின்றனர்.

இக்கருத்தரங்கத்தினை அவினாசிலிங்கம் பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் துவக்கி வைத்து தலைமையுரை ஆற்ற உள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு துவக்கவுரை ஆற்றவுள்ளார். தான்சானிய நாட்டு துணை தூதரக ஆணையர் முகமது எச். முகமது சிறப்புரை வழங்க உள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் பிரேமாவதி விஜயன் வாழ்த்துரை வழங்க உள்ளார்.

Newsletter

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...