கோவை: பொள்ளாச்சி அருகே 16-வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
கோவை: பொள்ளாச்சி அருகே 16-வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 26-வயது இளைஞருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தண்டபாணி(57) என்ற விவசாயியின் 16-வயது மகளுக்கும் இன்று திருமணம் நடப்பதாக, பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய சமூக நலத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய சமூக நலத்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கோமங்கலம் காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
இதையடுத்து, இரு தரப்பு பெற்றோர்களிடமும் விசாரணை மேற்கொண்டதில், 16-வயது சிறுமிக்குத் திருமணம் நடத்தப்பட இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பு பெற்றோர்களும் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், 18-வயது பூர்த்தி அடையாத பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்வது, தண்டனைக்குரிய குற்றம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி, திருமணத்தை நிறுத்தினர்.
மேலும் சிறுமிக்கு 18-வயது பூர்த்தி அடையாமல் திருமணம் செய்ய மாட்டோம் என்றும் கைப்பட எழுத்துப்பூர்வமாகப் பெற்றோர்களிடம் அதிகாரிகள் எழுதி வாங்கினர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 26-வயது இளைஞருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தண்டபாணி(57) என்ற விவசாயியின் 16-வயது மகளுக்கும் இன்று திருமணம் நடப்பதாக, பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய சமூக நலத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய சமூக நலத்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கோமங்கலம் காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
இதையடுத்து, இரு தரப்பு பெற்றோர்களிடமும் விசாரணை மேற்கொண்டதில், 16-வயது சிறுமிக்குத் திருமணம் நடத்தப்பட இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பு பெற்றோர்களும் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், 18-வயது பூர்த்தி அடையாத பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்வது, தண்டனைக்குரிய குற்றம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி, திருமணத்தை நிறுத்தினர்.
மேலும் சிறுமிக்கு 18-வயது பூர்த்தி அடையாமல் திருமணம் செய்ய மாட்டோம் என்றும் கைப்பட எழுத்துப்பூர்வமாகப் பெற்றோர்களிடம் அதிகாரிகள் எழுதி வாங்கினர்.