கோவை வால்பாறையில் தொலைத்தொடர்பு சேவை பாதிப்பால் வங்கி பணிகள் பாதிப்பு - மக்கள் அவதி!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தொலைத்தொடர்பு சேவை பாதிப்பால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தொலைத்தொடர்பு சேவை பாதிப்பால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று காலை முதல் தொலை தொடர்பு சேவை மற்றும் இணைய சேவைகள் பாதிப்படைந்துள்ளன. இதன் காரணமாக,

வால்பாறையில் வங்கிப் பணிகள் மற்றும் இ-சேவை மையங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மேலும், ஏடிஎம் மையங்களும் மூடப்பட்டுள்ளன.



இதன் காரணமாக, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களது மாத ஊதியத்தை ஏ.டி.எம் மூலம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், ஆதார் கார்டுகளில் பெயர் மாற்றம், வயது மாற்றம், ரேஷன் கார்டுகளில் பணிகள் எதுவும் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும், பள்ளி குழந்தைகள் இணையவழி கல்வியைப் பெற முடியாமலும் பாதிப்படைந்துள்ளனர். வங்கிப் பணிகள் எதுவும் நடைபெறாத காரணத்தால் வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். வால்பாறை பகுதியில் அடிக்கடி இணைய சேவைகள் பாதிப்படைவது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, வால்பாறை பகுதிக்கு தடையற்ற இணையவழி சேவையை அளிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...