கோவையில் பிரசவ வலியால் துடித்த வடமாநில பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்த ஊழியர்கள்..! குவியும் பாராட்டு!

கோவை: கோவையில் பிரசவ வலியால் துடித்த வடமாநில பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்த ஊழியர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.


கோவை: கோவையில் பிரசவ வலியால் துடித்த வடமாநில பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்த ஊழியர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

கோவையில் நேற்று சுந்தராபுரம் காமராஜர் நகர் பகுதியில் இருந்து வாயோ என்ற வட மாநிலத்தைச் சேர்ந்தவர் தன்னுடைய மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கூட்டிச் செல்ல வேண்டும் என்று ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் டிரைவர் சுரேஷ் மற்றும் அவசரகால மருத்துவ நிபுணர் கண்ணன் ஆகியோர் அவர்களுடைய வீட்டிற்குச் சென்றனர்.

அந்த பெண்ணை ஆம்புலன்சில் ஏற்றி அழைத்து வர முயன்றனர். பிரசவ வலி அதிகமானதைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், அவசர சூழ்நிலையை கருதி சிறப்பாக செயல்பட்டு பிரசவம் பார்த்த சுரேஷ் மற்றும் கண்ணன் அவர்களுக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

பின்னர், தாயையும் சேயையும் கோவை அரசு மருத்துவமனையில் பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...