கோவையில் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி 14.18 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

கோவையில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி 60 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி 60 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் முதல்கட்டமாக சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் முதல் தேதியில் இருந்து பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பொது மக்கள் தினமும் ஆர்வத்தோடு வந்து கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்கின்றனர்.

ஆனால், தொடர்ந்து வரும் தடுப்பூசி தட்டுப்பாட்டால் அவ்வப்போது சிறப்பு முகாம்கள் மாநகராட்சி மற்றும் ஊரக பகுதியில்நடத்தப்படுவதில்லை. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை 60 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: கோவை மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 38 லட்சம் ஆகும். இதில், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 27 லட்சம் ஆவர்ம் இவர்களில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி 16 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இது கோவை மாவட்டத்தின்மக்கள் தொகையில் இது 60 சதவீதமாகும்.

இதுதவிர இரண்டு தவணை தடுப்பூசிகளும் 3 லட்சத்து 83 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் இரண்டு தவணை தடுப்பூசிகளும் 14.18 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 60 சதவீதம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதால் கொரோனா 3 ஆவது அலையில் பெரியளவில் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...