பொள்ளாச்சி: குமரன் நகரில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றக் கோரி இந்து அமைப்புகள் இன்று சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி: குமரன் நகரில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றக் கோரி இந்து அமைப்புகள் இன்று சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி குமரன் நகர்ப் பகுதியில், நேற்று முன்தினம் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கொடிக்கம்பம் வைக்க முயன்றபோது, அங்கு இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், செல்வநாககரத்தினம் மற்றும் பொள்ளாச்சி சார்-ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தி கொடிக் கம்பங்களை அகற்றினர்.
இந்நிலையில், பொள்ளாச்சி நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள், பதாதைகள் உள்ளிட்ட அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து, இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.
மனுவை விசாரித்த பொள்ளாச்சி சார் ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
பொள்ளாச்சி குமரன் நகர்ப் பகுதியில், நேற்று முன்தினம் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கொடிக்கம்பம் வைக்க முயன்றபோது, அங்கு இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், செல்வநாககரத்தினம் மற்றும் பொள்ளாச்சி சார்-ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தி கொடிக் கம்பங்களை அகற்றினர்.
இந்நிலையில், பொள்ளாச்சி நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள், பதாதைகள் உள்ளிட்ட அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து, இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.
மனுவை விசாரித்த பொள்ளாச்சி சார் ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.