கோவை: பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் முறைகேடு என புகார் தெரிவித்தனர்.
கோவை: பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் முறைகேடு என புகார் தெரிவித்தனர்.
தமிழகத்தின் மிகப்பெரிய பாசனத் திட்டங்களில் ஒன்றான பரம்பிக்குளம் ஆழியாறு(PAP)பாசனத் திட்டத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் பல்வேறு முரண்பாடுகள் ஏற்படுவதால், விவசாயிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி ஏராளமான விவசாயிகள் இன்று உடுமலை பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் காந்தி மற்றும் காமராஜர் புகைப்படங்களை வைத்து தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர். பாசன கால்வாயின் கரையோரங்களில் செயல்பட்டுவரும் மட்டை மில்கள் மற்றும், கோழிப் பண்ணைகளின் தேவைக்காக ஏராளமான தண்ணீர் திருடப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

ஆனால் இதுகுறித்து எந்த ஒரு புகார் தெரிவித்தாலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர் மேலாண்மையில் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தி வருவதாகவும், விவசாயிகள் தெரிவித்தனர்.
இவைகளின் விளைவாக விவசாயிகளுக்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு அவர்கள் கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். எனவே பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் உள்ள குறைகளைக் களைந்து விவசாயிகளுக்கு நன்மை செய்யவேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகத் தண்ணீர் திருடப்பட்டால் விவசாயிகள் களத்தில் இறங்கி நடவடிக்கை மேற்கொள்வோம் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தின் மிகப்பெரிய பாசனத் திட்டங்களில் ஒன்றான பரம்பிக்குளம் ஆழியாறு(PAP)பாசனத் திட்டத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் பல்வேறு முரண்பாடுகள் ஏற்படுவதால், விவசாயிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி ஏராளமான விவசாயிகள் இன்று உடுமலை பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் காந்தி மற்றும் காமராஜர் புகைப்படங்களை வைத்து தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர். பாசன கால்வாயின் கரையோரங்களில் செயல்பட்டுவரும் மட்டை மில்கள் மற்றும், கோழிப் பண்ணைகளின் தேவைக்காக ஏராளமான தண்ணீர் திருடப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
ஆனால் இதுகுறித்து எந்த ஒரு புகார் தெரிவித்தாலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர் மேலாண்மையில் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தி வருவதாகவும், விவசாயிகள் தெரிவித்தனர்.
இவைகளின் விளைவாக விவசாயிகளுக்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு அவர்கள் கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். எனவே பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் உள்ள குறைகளைக் களைந்து விவசாயிகளுக்கு நன்மை செய்யவேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகத் தண்ணீர் திருடப்பட்டால் விவசாயிகள் களத்தில் இறங்கி நடவடிக்கை மேற்கொள்வோம் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.