பொள்ளாச்சி அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பில் 3-வயது சிறுமி மர்மமான முறையில் பலி.!! பெற்றோர்களிடம் விசாரணை.!!

பொள்ளாச்சி அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பில் 3-வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்ததால், கோவை மாவட்ட எஸ்.பி. பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.


பொள்ளாச்சி அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பில் 3-வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்ததால், கோவை மாவட்ட எஸ்.பி. பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள தம்பதி கல்லாங்குத்து மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்த கூலித் தொழிலாளி, மணிகண்டன்(22), அவரது மனைவி சரோஜினி(20) ஆகியோரின் 3-வயது பெண் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி, தாய் சரோஜினி மற்றும் அருகில் வசிப்போரும் சேர்ந்து, வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவமனை செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்த நிலையில், குழந்தையின் உயிரிழப்பு குறித்து சந்தேகம் எழுந்ததால், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஆனைமலை காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.



இதையடுத்து, கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தலைமையில், காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்றனர். சம்பவ இடத்தில் குழந்தையின் தாய் சரோஜினி மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்து வந்த நிலையில், குழந்தையின் இறப்பு குறித்து சந்தேகம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, குழந்தையின் தந்தை மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் ஆனைமலை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...