கோவை காரமடை அருகே நூற்பாலையில் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசம்!

கோவை: கோவை காரமடை அருகே நூற்பாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமாயின.


கோவை: கோவை காரமடை அருகே நூற்பாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமாயின.

கோவை காரமடையை அடுத்துள்ள சாந்திமேடு எனும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும், இங்கு வந்து பஞ்சுகளை வாங்கி நூல் நூற்று வருகின்றனர். இதனால் சுமார் 700க்கும் மேற்பட்ட மூட்டை பஞ்சுகளை குடோனில் அடுக்கி வைத்திருந்தனர்.

இந்த நிலையில், நேற்று மாலை திடீரென்று பஞ்சு மூட்டைகளில் தீப்பற்றியுள்ளது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென்று பற்றியுள்ளது. இதனால் குடோனில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பஞ்சு மூட்டைகள் தீயில் எரிந்து நாசமாயின.

இது குறித்து தகவலறிந்து மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் நிலைய அலுவலர்கள் பாலசுந்தரம், ரகுநாதன், தனசேகரன் தலைமையில் வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயிணை அணைத்தனர்.

இதில், அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்புமில்லை. இருப்பினும், பஞ்சு மூட்டைகளில் பற்றிய தீ அணைக்கப்பட்டதால் அப்பகுதியே புகை மூட்டமாக காட்சியளித்தது.

இந்த தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமானதால் பல லட்ச ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...