கோவை கிணத்துக்கடவு அருகே 4 வயது மகனுடன் மனைவி மாயம் - காவல் நிலையத்தில் கணவர் புகார்!

கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே 4 வயது மகனுடன் மனைவி மாயமானதாக காவல் நிலையத்தில் கணவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே 4 வயது மகனுடன் மனைவி மாயமானதாக காவல் நிலையத்தில் கணவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள 10 நெம்பர் முத்தூர், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ரவிக்குமார் (39) என்பவர் மனைவி சந்திரகலா (35) மகன் பிரவீன்குமார் ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 3ம் தேதி மதியம் ரவிக்குமாரின் மனைவி சந்திரகலா தனது நான்கு வயது மகளுடன் கடைக்குச் சென்று வருவதாக கூறி சென்றுள்ளனர். ஆனால், வெகுநேரமாகியும் வீட்டுக்கு வராததால் கணவன் ரவிக்குமார் உறவினர் மற்றும் நண்பர்களிடம் விசாரித்தும், இருவரையும் தேடி வந்தனர்.

ஆனால், மனைவி மற்றும் மகளை கண்டுபிடிக்க முடியாததால் நேற்று மாலை மாயமான சந்திரிக்கலாவின் கணவர் ரவிக்குமார், கிணத்துக்கடவு காவல் நிலையத்தில், மனைவி மற்றும் 4 வயது மகனை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, புகாரின் பேரில் கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாயமான சந்திரகலா மற்றும் நான்கு வயது சிறுவனை தேடி வருகின்றனர்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...