கோவையில் கடைத்தெருக்களில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த 20 பறக்கும் படை குழுக்கள் அமைப்பு!

கோவை: கோவையில் கடைத்தெரு பகுதிகளில் அதிகரித்து காணப்படும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பாக 20 பறக்கும் படை குழுக்களை சேர்ந்த அதிகாரிகள் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவையில் கடைத்தெரு பகுதிகளில் அதிகரித்து காணப்படும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பாக 20 பறக்கும் படை குழுக்களைச் சேர்ந்த அதிகாரிகள் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் வீதி, 100 அடி சாலை, காந்திபுரம், டவுன்ஹால், உக்கடம் உள்ளிட்ட கடைத்தெரு பகுதிகளில் ஜவுளி கடைகள், நகை கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள் போன்ற பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, கடைத்தெரு பகுதிகளில் கடைகளின் உரிமையாளர்களிடம் கொரோனா விதிமுறைகளை பின்பற்றியே கடைகளை திறக்கவும், வாடிக்கையாளர்களை அனுமதிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதித்தல், ஞாயிற்றுக்கிழமைகளில் குறிப்பிட பகுதிகளில் கடைகளை முழுவதுமாக அடைத்தல், மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி கடைகளை திறப்பது போன்ற விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடைத்தெரு பகுதிகளில் கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் 20 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடைத்தெருக்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த 20 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் சுழற்சி முறையில் தங்கள் பணிகளை மேற்கொள்வார்கள். மாலை 5 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டிருந்தாலும் இரவு நேர ரோந்து பணியிலும் இந்த குழுக்கள் ஈடுபடும்.

மேலும், பறக்கும் படை அதிகாரிகள் கடைகளில் உள்ள உரிமையாளர்களிடமும், வாடிக்கையாளர்களிடமும் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். தொழிலாளர்களை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்துவார்கள். விதிகளை மீறுவோர்களிடம் அபராதம் விதிக்கப்படும்,' என்று தெரிவித்தார்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...