கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மற்றும் ஆழியார் இலங்கை அகதிகள் முகாமில் நேற்று அகதிகள் மறுவாழ்வு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மற்றும் ஆழியார் இலங்கை அகதிகள் முகாமில் நேற்று அகதிகள் மறுவாழ்வு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மற்றும் ஆழியார் பகுதிகளில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் நேற்று அகதிகள் மறுவாழ்வு துறை அதிகாரிகள் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அகதிகள் மறுவாழ்வு துறை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ராமதிலகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர்கள், வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆய்வின்போது இலங்கை அகதிகளின் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டு அறியப்பட்டது.
பல ஆண்டுகளாக முகாம்களில் வசித்து வரும் இலங்கை அகதிகளுக்கு, இந்திய குடியுரிமை வழங்க வேண்டும், அகதிகள் முகாமில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இலங்கை அகதிகள் அதிகாரிகளிடம் முன்வைத்தனர்.
இதையடுத்து, கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டு, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மற்றும் ஆழியார் பகுதிகளில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் நேற்று அகதிகள் மறுவாழ்வு துறை அதிகாரிகள் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அகதிகள் மறுவாழ்வு துறை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ராமதிலகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர்கள், வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆய்வின்போது இலங்கை அகதிகளின் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டு அறியப்பட்டது.
பல ஆண்டுகளாக முகாம்களில் வசித்து வரும் இலங்கை அகதிகளுக்கு, இந்திய குடியுரிமை வழங்க வேண்டும், அகதிகள் முகாமில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இலங்கை அகதிகள் அதிகாரிகளிடம் முன்வைத்தனர்.
இதையடுத்து, கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டு, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.