மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கோவையில் திருநங்கைகள் மெளன அஞ்சலி ஊர்வலம்


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5-ம் தேதியன்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவருக்காக கண்ணீர் அஞ்சலி, மெளன அஞ்சலி ஊர்வலம், மொட்டை அடித்தல் உள்ளிட்டவைகள் அதிமுக கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் செலுத்தி வருகின்றனர். 



இதன் ஒரு பகுதியாக கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் திருநங்கைகள் சார்பாக ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து இதில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட அவர்கள் கவுண்டம்பாளையத்திலிருந்து டி.வி.எஸ் நகர் வரை மெளன ஊர்வலமாக சென்றனர். 



இதுகுறித்து கோவை மாவட்ட திருநங்கைகள் சங்க செயலாளர் பூங்குழலி கூறும்போது, கோவை மாவட்டத்தில் 480-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதா எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பசுமை வீடுகள், ஆதார் கார்டுகள் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். மேலும், ரேசன் கார்டுகள் குடும்பங்களுக்கு தான் வழங்கப்படும். நாங்கள் எங்கள் குடும்பத்துடன் இல்லை. ஆனால், ஜெயலலிதா ரேசன் கார்டுகள் 1 வாரத்தில் எங்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். 



எங்களுக்கு வேலைகளும் தற்போது கிடைக்கிறது. எங்களாலும் இந்த சமூகத்தில் நிம்மதியாக வாழ முடியும் என்பது ஜெயலலிதாவின் ஆட்சியில்  தான். அவர்கள் இறந்த செய்தியை கேட்டு எங்களால் 2 நாட்களாக தூங்க முடியவில்லை, உணவு உண்ணவில்லை , இனிமேல் இவரை போல தலைவர் வருவாரா என்பது சந்தேகமே என்று கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...