கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 78 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்!!

கோவை: கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் ஜனவரி முதல் தற்போது வரை 78 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக சமூக நலத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் ஜனவரி முதல் தற்போது வரை 78 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக சமூக நலத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சமூக நலத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் பெறப்படும் புகார் அடிப்படையில் குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படுகிறது.

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது மட்டுமில்லாமல் மீட்கப்படும் குழந்தைகளின் திருமண வயது வரை தொடர்ந்து சமூகநலத் துறையினரால் கண்காணிக்கப்படுகின்றனர்.

மீட்கப்படுபவர்கள் ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் வாரத்துக்கொருமுறை நேரில் வந்து கையெழுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த ஆண்டு 53 குழந்தைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்தாண்டு இதுவரை 78 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 4 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கோவையில் ஆண்டுதோறும் தடுத்து நிறுத்தப்படும் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதற்கு காரணம் குழந்தை திருமணம் தொடர்பான விழிப்புணர்வை அதிகப்படுத்தியுள்ளதே முக்கிய காரணம். தொடர்ந்து கிராமங்கள், நகர்ப்புறங்களில் குழந்தைகள் திருமணம் தடை சட்டம், குழந்தைகள் திருமணம் தொடர்பாக தகவல் அளிக்க வேண்டிய விவரங்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலகு குறித்தும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...