கோவை: கிணத்துக்கடவு தொகுதியில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி நடைபெறும் முகாமில் எம்.எல்.ஏ., செ.தாமோதரன் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கிணத்துக்கடவு தொகுதியில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி நடைபெறும் முகாமில் எம்.எல்.ஏ., செ.தாமோதரன் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மதுக்கரை ஒன்றியம் வழுக்குப்பாறை ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இந்தத் தடுப்பூசி முகாமில் 250 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இந்தநிலையில், தடுப்பூசி போடும் முகாமை இன்று கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் சமூக இடைவெளியுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ., எட்டிமடை சண்முகம், வழுக்குப்பாறை ஊராட்சி மன்றத் தலைவர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மதுக்கரை ஒன்றியம் வழுக்குப்பாறை ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இந்தத் தடுப்பூசி முகாமில் 250 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இந்தநிலையில், தடுப்பூசி போடும் முகாமை இன்று கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் சமூக இடைவெளியுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ., எட்டிமடை சண்முகம், வழுக்குப்பாறை ஊராட்சி மன்றத் தலைவர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.