திருப்பூர்: திருப்பூரில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 388 பயனாளிகளுக்கு 74.01 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை செய்தித்துறை அமைச்சர் வழங்கினார்.
திருப்பூர்: திருப்பூரில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 388 பயனாளிகளுக்கு 74.01 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை செய்தித்துறை அமைச்சர் வழங்கினார்.
திமுக தேர்தல் பிரசாரத்தின் போது உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் அந்தந்த தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

அவ்வாறு அனுப்பப்பட்ட மனுக்களில் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு வட்டத்தில் 388 பயனாளிகளுக்கு இன்று 74.01 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்தநிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் வினீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திமுக தேர்தல் பிரசாரத்தின் போது உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் அந்தந்த தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
அவ்வாறு அனுப்பப்பட்ட மனுக்களில் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு வட்டத்தில் 388 பயனாளிகளுக்கு இன்று 74.01 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்தநிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் வினீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.