கோவையில் தமிழக அரசுக்கு சொந்தமான காதிகிராப்ட்டில் நள்ளிரவில் கொள்ளையர்கள் புகுந்து ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான சேலைகளை திருடி சென்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவையில் தமிழக அரசுக்கு சொந்தமான காதிகிராப்ட்டில் நள்ளிரவில் கொள்ளையர்கள் புகுந்து ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான சேலைகளை திருடி சென்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை உப்பிலிபாளையம் அவிநாசி மேம்பாலத்திற்கு அடியில் அரசுக்கு சொந்தமான காதிகிராப்ட் என்று சொல்லக்கூடிய அரசு விற்பனை செயல்பட்டு வருகிறது. இன்று, அங்கு பணியாற்றக்கூடிய ஊழியர்கள் வழக்கம் போல காலையில் வேலைக்கு வந்தவர்கள், முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது சேலைகள் வைத்துள்ள பகுதி அலங்கோலமாக கிடந்துள்ளது. இதுகுறித்து, அவர்கள் உடனே ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான சேலைகள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.
திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த, காதிகிராப்ட்டிற்கு பின்புறம் பழைய கோர்ட் உள்ளது. அந்தப் பகுதி யாரும் பயன்படுத்தாமல் பாழடைந்து கிடப்பதை பயன்படுத்தி, இரவு நேரங்களில், மது அருந்துவது, போதை வஸ்துக்கள் பயன்படுத்தி வருவது போன்ற சட்டவிரோத செயல்கள் அங்கு நடப்பது வாடிக்கை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
எனவே, அந்தப் பகுதிக்கு அடிக்கடி வந்து செல்லக்கூடிய சமூக விரோதிகளுக்கு இந்த திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை உப்பிலிபாளையம் அவிநாசி மேம்பாலத்திற்கு அடியில் அரசுக்கு சொந்தமான காதிகிராப்ட் என்று சொல்லக்கூடிய அரசு விற்பனை செயல்பட்டு வருகிறது. இன்று, அங்கு பணியாற்றக்கூடிய ஊழியர்கள் வழக்கம் போல காலையில் வேலைக்கு வந்தவர்கள், முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது சேலைகள் வைத்துள்ள பகுதி அலங்கோலமாக கிடந்துள்ளது. இதுகுறித்து, அவர்கள் உடனே ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான சேலைகள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.
திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த, காதிகிராப்ட்டிற்கு பின்புறம் பழைய கோர்ட் உள்ளது. அந்தப் பகுதி யாரும் பயன்படுத்தாமல் பாழடைந்து கிடப்பதை பயன்படுத்தி, இரவு நேரங்களில், மது அருந்துவது, போதை வஸ்துக்கள் பயன்படுத்தி வருவது போன்ற சட்டவிரோத செயல்கள் அங்கு நடப்பது வாடிக்கை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
எனவே, அந்தப் பகுதிக்கு அடிக்கடி வந்து செல்லக்கூடிய சமூக விரோதிகளுக்கு இந்த திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.