கோவை: பொது இடத்தில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட மாநகராட்சி துப்புரவுப் பணியாளருக்கு மண்டை உடைப்பு, இதனையடுத்து 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: பொது இடத்தில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட மாநகராட்சி துப்புரவுப் பணியாளருக்கு மண்டை உடைப்பு, இதனையடுத்து 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் தெருவின் மையப் பகுதியில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தவர்களை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர் தட்டிக் கேட்டதற்காகக் கற்களைக் கொண்டு தாக்கி மண்டையை உடைத்த 2 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை வெரைட்டி ஹால் ரோடு சிஎம்சி காலனி பகுதியில் வசித்து வருபவர் முருகன் என்பவரின் மகன் கார்த்திக்(24). இவர் கோவை மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். இவரது குடியிருப்பின் அருகில் மூன்று பேர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த கார்த்திக் அவர்களை பொது இடத்தில் அமர்ந்து மது அருந்தக் கூடாது என எச்சரித்தார்.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதையடுத்து நேற்று இரவு கார்த்திக் தனது வீட்டின் அருகில் நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கார்த்திக் மாலையில் மது அருந்தி எச்சரித்த நபர்கள் அங்கு வந்து தகராற்றில் ஈடுபட்டனர்.
மேலும் கார்த்திகை தாக்கத் துவங்கினர். அருகிலிருந்த கற்களை எடுத்து கார்த்திக்கின் முகத்தில் வீசி எறிந்தனர். இதில் கார்த்திக்கிற்கு முகம் மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து கார்த்திக் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் அளித்த புகாரின் பேரில் காவல்துறை கார்த்திக் மீது தாக்குதல் நடத்திய அதே பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவரின் மகன் நாகராஜ் (37) மற்றும் மதுரை வீரன் (30) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையில் தெருவின் மையப் பகுதியில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தவர்களை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர் தட்டிக் கேட்டதற்காகக் கற்களைக் கொண்டு தாக்கி மண்டையை உடைத்த 2 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை வெரைட்டி ஹால் ரோடு சிஎம்சி காலனி பகுதியில் வசித்து வருபவர் முருகன் என்பவரின் மகன் கார்த்திக்(24). இவர் கோவை மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். இவரது குடியிருப்பின் அருகில் மூன்று பேர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த கார்த்திக் அவர்களை பொது இடத்தில் அமர்ந்து மது அருந்தக் கூடாது என எச்சரித்தார்.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதையடுத்து நேற்று இரவு கார்த்திக் தனது வீட்டின் அருகில் நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கார்த்திக் மாலையில் மது அருந்தி எச்சரித்த நபர்கள் அங்கு வந்து தகராற்றில் ஈடுபட்டனர்.
மேலும் கார்த்திகை தாக்கத் துவங்கினர். அருகிலிருந்த கற்களை எடுத்து கார்த்திக்கின் முகத்தில் வீசி எறிந்தனர். இதில் கார்த்திக்கிற்கு முகம் மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து கார்த்திக் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் அளித்த புகாரின் பேரில் காவல்துறை கார்த்திக் மீது தாக்குதல் நடத்திய அதே பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவரின் மகன் நாகராஜ் (37) மற்றும் மதுரை வீரன் (30) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.