கோவை: வால்பாறையில் மீண்டும் கரடி தாக்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: வால்பாறையில் மீண்டும் கரடி தாக்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று முன்தினம் வில்லோனி தேயிலை தோட்டத்தில் கரடி தாக்கி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மீண்டும் ஒரு தொழிலாளியை கரடி தாக்கியுள்ளது. வால்பாறையை அடுத்த அய்யர்பாடி தேயிலை தோட்டத்தில் இரவு 11.20 மணியளவில் அய்யர்பாடி இரண்டாம் டிவிசனை சேர்ந்த ஆசிர்வாதம் என்பவரது மகன் வசந்த்பிரபாகர் வயது (22), என்கிற நபர் கரடியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார்.
பின்னர், படுகாயமடைந்த வசந்த் பிரபாகரன் மீட்கப்பட்டு, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக வசந்த் பிரபாகரன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் வால்பாறை பகுதியில் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று முன்தினம் வில்லோனி தேயிலை தோட்டத்தில் கரடி தாக்கி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மீண்டும் ஒரு தொழிலாளியை கரடி தாக்கியுள்ளது. வால்பாறையை அடுத்த அய்யர்பாடி தேயிலை தோட்டத்தில் இரவு 11.20 மணியளவில் அய்யர்பாடி இரண்டாம் டிவிசனை சேர்ந்த ஆசிர்வாதம் என்பவரது மகன் வசந்த்பிரபாகர் வயது (22), என்கிற நபர் கரடியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார்.
பின்னர், படுகாயமடைந்த வசந்த் பிரபாகரன் மீட்கப்பட்டு, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக வசந்த் பிரபாகரன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் வால்பாறை பகுதியில் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.