கோவை: கோவை ஆட்சியரை மிரட்டும் தோணியில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் பரபரப்பு நிலவியது.
கோவை: கோவை ஆட்சியரை மிரட்டும் தோணியில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் பரபரப்பு நிலவியது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தடுப்பூசி மையங்களை அதிகப்படுத்தக் கோரி மனு அளிக்க அளிக்க இன்று வந்தனர்.
அப்போது, மனுவைக் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் வழங்கினர்.
அப்போது, திடீரென பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், என்ன மரியாதை இல்லாமால், அமர்ந்தவாறு மனுவை வாங்குகிறீர்கள்? என்று ஆட்சியரை நோக்கி கையை நீட்டிப் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்குச் சலசலப்பு ஏற்பட்டது.
அவரை தொடர்ந்து, ஆட்சியரை மிரட்டும் தோணியில் பிற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் பேசியதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.