பொள்ளாச்சியில் 100-நாள் பணிகளில் முறைகேடு செய்வதாக கூறி, பொதுமக்கள் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்!

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள தென் குமாரபாளையம் ஊராட்சி செயலாளர் 100-நாள் பணிகளில் முறைகேடு செய்வதாகக் கூறி, பொதுமக்கள் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள தென் குமாரபாளையம் ஊராட்சி செயலாளர் 100-நாள் பணிகளில் முறைகேடு செய்வதாகக் கூறி, பொதுமக்கள் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.



பொள்ளாச்சி அருகே உள்ள தென் குமாரபாளையம் ஊராட்சியில், பணியாற்றிவரும் ஊராட்சி செயலாளர், 100 நாள் வேலைத் திட்டப் பணிகளில், முறையீடு செய்து, பொன்னேகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த 100 நாள் பணியாளர்களுக்கு, பணி வழங்குவதில்லை எனக் கூறி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தைப் பொதுமக்கள் இன்று முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

இதுகுறித்து அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

'தென் குமாரபாளையம் ஊராட்சி செயலாளர் அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்படுவதோடு, மது அருந்திவிட்டு பணிக்கு வருவதால், மக்கள் பணி செய்வதில் இடையூறு ஏற்பட்டு வருகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென்று' மனுவில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த பொள்ளாச்சி சார்-ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ ராவ் கோரிக்கை குறித்து விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...