கோவை: வால்பாறையில் தொழிலாளியை தாக்கி கொன்ற கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கோவை: வால்பாறையில் தொழிலாளியை தாக்கி கொன்ற கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள வில்லோனி எஸ்டேட்டில் பணியாற்றிய தொழிலாளி மோகன்ராஜ் (36) என்பவர் நேற்று முன்தினம் இரவு கரடி தாக்கி உயிரிழந்தார். அவருடைய உடல் வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை வீ. அமீது, திமுக நகர பொறுப்பாளர் பால்பாண்டி மற்றும் நிர்வாகிகள், தோட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பக உதவி இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின்பேரில் நிவாரண தொகையின் ஒரு பகுதியான ரூபாய் 50 ஆயிரத்தை உறவினர்களிடம் வழங்கினர்.
மேலும் வில்லோனி எஸ்டேட்டில் கரடியின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை சிறப்பு குழுக்களை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் உலாவரும் கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து உள்ளனர். கரடியை பிடிப்பதற்காக கூண்டுக்குள் பழங்களை வைத்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள வில்லோனி எஸ்டேட்டில் பணியாற்றிய தொழிலாளி மோகன்ராஜ் (36) என்பவர் நேற்று முன்தினம் இரவு கரடி தாக்கி உயிரிழந்தார். அவருடைய உடல் வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை வீ. அமீது, திமுக நகர பொறுப்பாளர் பால்பாண்டி மற்றும் நிர்வாகிகள், தோட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பக உதவி இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின்பேரில் நிவாரண தொகையின் ஒரு பகுதியான ரூபாய் 50 ஆயிரத்தை உறவினர்களிடம் வழங்கினர்.
மேலும் வில்லோனி எஸ்டேட்டில் கரடியின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை சிறப்பு குழுக்களை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் உலாவரும் கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து உள்ளனர். கரடியை பிடிப்பதற்காக கூண்டுக்குள் பழங்களை வைத்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.