கோவை: கோவையில் நீடித்து வரும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால், பொதுமக்களிடையே பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. தமிழகத்திற்கு போதிய அளவு தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், சற்று முன்பு கோவைக்கு 18,500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்து இறங்கியுள்ளதாக, கோவை மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோவை: கோவையில் நீடித்து வரும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால், பொதுமக்களிடையே பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. தமிழகத்திற்கு போதிய அளவு தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், சற்று முன்பு கோவைக்கு 18,500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்து இறங்கியுள்ளதாக, கோவை மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தடுப்பூசி முகாம்கள் நடைபெறவில்லை. நேற்று முன்தினம் ஊரக பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து மாநகராட்சிப் பகுதியில் நேற்றும் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் முகாம் நடத்தப்படவில்லை. இதனால், ஏற்கனவே ஒரு தவணை தடுப்பூசி போட்டவர்கள், அடுத்த தவணை தடுப்பூசியை அந்த குறிப்பிட்ட இடைவெளியில் செலுத்திக்கொள்ள முடியாத நிலை நீடித்து வருகிறது.
இந்த நெருக்கடியைச் சமாளிக்க, சென்னையில் இருந்து 18,500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் கோவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இனி வரும் நாட்களில் மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மீண்டும் மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் இதுவரை 10 லட்சத்து 56 ஆயிரத்து 782 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தடுப்பூசி முகாம்கள் நடைபெறவில்லை. நேற்று முன்தினம் ஊரக பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து மாநகராட்சிப் பகுதியில் நேற்றும் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் முகாம் நடத்தப்படவில்லை. இதனால், ஏற்கனவே ஒரு தவணை தடுப்பூசி போட்டவர்கள், அடுத்த தவணை தடுப்பூசியை அந்த குறிப்பிட்ட இடைவெளியில் செலுத்திக்கொள்ள முடியாத நிலை நீடித்து வருகிறது.
இந்த நெருக்கடியைச் சமாளிக்க, சென்னையில் இருந்து 18,500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் கோவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இனி வரும் நாட்களில் மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மீண்டும் மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் இதுவரை 10 லட்சத்து 56 ஆயிரத்து 782 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.